கவுண்டர்களுக்கும் இடம் வேண்டும்… தி.மு.க-வில் ஒலிக்கும் சாதி கோரிக்கை!

 

கவுண்டர்களுக்கும் இடம் வேண்டும்… தி.மு.க-வில் ஒலிக்கும் சாதி கோரிக்கை!


தி.மு.க-வில் கொங்கு வேளாள கவுண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், அவர்களுக்கு மாநில அளவில் உயர் பதவி வழங்க வேண்டும் என்று கொங்கு மண்டலத்திலிருந்து நெருக்கடி வரத் தொடங்கியுள்ளது.

கவுண்டர்களுக்கும் இடம் வேண்டும்… தி.மு.க-வில் ஒலிக்கும் சாதி கோரிக்கை!


தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் வந்துள்ளார். அவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். டி.ஆர்.பாலு முக்குலத்தோர் சமூகம் என்பதால் வட தமிழ்நாடு, மத்திய, தென் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டது. கொங்கு மண்டலத்தை புறக்கணிக்கக் கூடாது என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்துள்ளது.

கவுண்டர்களுக்கும் இடம் வேண்டும்… தி.மு.க-வில் ஒலிக்கும் சாதி கோரிக்கை!


உயர் பதவிகளில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றால் நாளை அங்கு தேர்தலில் வாக்கு கேட்டு கூட செல்ல முடியாது. எனவே, இணை பொதுச் செயலாளர் அல்லது துணைப் பொதுச் செயலாளர் பதவியிடங்களில் கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கவுண்டர்களுக்கும் இடம் வேண்டும்… தி.மு.க-வில் ஒலிக்கும் சாதி கோரிக்கை!


ஏற்கனவே, தி.மு.க-வில் இணைப் பொதுச் செயலாளர் பதவி இடங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளனர். வி.பி.துரைசாமி பா.ஜ.க சென்றுவிட்டார். சுப்புலட்சுமி ஜெகதீசன் பெண்கள் பிரதிநிதியாக உள்ளார். இந்த நிலையில் பொங்கலூர் பழனிசாமி போன்ற முக்கிய பிரமுகர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கவுண்டர்களுக்கும் இடம் வேண்டும்… தி.மு.க-வில் ஒலிக்கும் சாதி கோரிக்கை!


கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க மிகவும் வலிமையாக உள்ளது. அங்கு கவுண்டர்களின் ஆதரவைப் பெற, அ.தி.மு.க-வின் கவுண்டர் ஆதரவை உடைக்க மாநில அளவில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பதவி வழங்கப்பட வேண்டும் என்று கொங்கு மண்டலத்திலிருந்து அழுத்தம் வருகிறதாம். தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது பொதுக் குழுவில் தெரிந்துவிடும்!