ஓபிசி சாதிச்சான்றிதழ் அளிக்கும் போது ‘இதையெல்லாம்’ பார்க்காதீங்க : தமிழக அரசு உத்தரவு!

 

ஓபிசி சாதிச்சான்றிதழ் அளிக்கும் போது ‘இதையெல்லாம்’ பார்க்காதீங்க :  தமிழக அரசு உத்தரவு!

ஓபிசி பிரிவினருக்கு சாதிச்சான்றிதழ் வழங்கும்போது ஊதியம் வேளாண் வருமானத்தை கணக்கில் எடுக்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓபிசி சாதிச்சான்றிதழ் அளிக்கும் போது ‘இதையெல்லாம்’ பார்க்காதீங்க :  தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, OBC – Non Creamy-layer பிரிவினருக்கு சாதிச்சான்று வழங்கும்போது, ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளளது.இந்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வளமான பிரிவினரை நீக்கி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் இந்திய அரசால் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறைகளும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. வளமான பிரிவினரை நீக்கம் நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை கணக்கிடும்போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை சேர்க்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 1993-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பெற்றோர் ஆண்டு வருமான வரம்பு ரூபாய் ஒரு லட்சத்தில் இருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு ரூபாய் 8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும்படி, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இருப்பினும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெற இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. தகுதியான நபர்களுக்கு வளமான பிரிவினரை நீக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ. 8 லட்சம் என்ற பெற்றோரின் ஆண்டு வருமானத்தை கணக்கிடும் பொழுது, ஊதியம் மற்றும் விவசாயம் ஆகியவற்றிலிருந்து பெறுகின்ற வருமானத்தை கணக்கில் கொள்ளப் படாமல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதி சான்றிதழ் வழங்கும்படி சாதி சான்று வழங்கும் அதிகாரிகளுக்கு, தகுந்த அறிவுரைகள் வழங்கி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தலைவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏனைய இனங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதி சான்றிதழ் வழங்கும் பொழுது வளமான பிரிவினரை நீக்கம் செய்வது தொடர்பாக பெற்றோரின் ஆண்டு வருமானம் கணக்கிடுவது குறித்த விளக்கங்கள் தகவலுக்காக இணைக்கப்பட்டுள்ளன ” என்று மேற்கூறிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது