கொடியேற்றுவதில் தகராறு! அதிமுக, ‌திமுக எம்எல்ஏக்கள் உள்பட 604 பேர் மீது வழக்குப்பதிவு

 

கொடியேற்றுவதில் தகராறு! அதிமுக, ‌திமுக எம்எல்ஏக்கள் உள்பட 604 பேர் மீது வழக்குப்பதிவு

அதிமுகவிலிருந்து அண்மையில் விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தலைமையில் விளாத்திக்குளத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. அப்போது அங்கு வந்த விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் தலைமையிலான அதிமுகவினர், கொடியேற்றும் பகுதிக்கு வந்து பிரச்னையில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த பிரச்சினையில் அதிமுக மீது போலீசார் தடியடி நடத்தினர்.

கொடியேற்றுவதில் தகராறு! அதிமுக, ‌திமுக எம்எல்ஏக்கள் உள்பட 604 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு தடையை மீறி அதிகம் கூட்டம் கூட்டியதாக அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் உட்பட 104 அதிமுகவினர் மற்றும் திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் உட்பட 500 பேர் வீதம் மொத்தம் 604 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.