10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்கக் கோரிய வழக்கு 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்கக் கோரிய வழக்கு 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

10 ஆம் வகுப்பு வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதனை ஒத்தி வைக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே போல பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வை ஒத்திவைக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு விசாரணை இன்று இரண்டாவது முறையாக மீண்டும் தொடங்கியது. அப்போது அரசு தரப்பில் ஆஜாரான வாழக்கறிஞர் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகும் என்பதால் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என கூறினார்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்கக் கோரிய வழக்கு 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

தொடர்ந்து, தமிழகத்தில் 2 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். அதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்குகளுடன் சேர்ந்து விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.