முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்த நிதி விவரங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரி வழக்கு!

 

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்த நிதி விவரங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரி வழக்கு!

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோடியும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க பலரும் நிதியுதவி அளித்தனர். குறிப்பாக சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் நாடு முழுவதும் நிதி திரட்டப்பட்டது. கடந்த மாதம் 13 ஆம் தேதி நிலவரத்தின் படி, முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.136,63,54,364 வரப்பெற்றதாகவும் கடந்த மாதம் 21 ஆம் தேதி முதலமைச்சர் நிவாரண நிதி கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கடந்த 15 ஆம் தேதி நிலவரத்தின் படி, ரூ.367 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது. இந்த நிவாரண தொகையை கொண்டு அரசு, அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்த நிதி விவரங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரி வழக்கு!

 

இந்நிலையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்த நிதி விவரங்களை இணையதளத்தில் வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக ஜூன் 4ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.