ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

ஆன்லைனில் ’ரம்மி’ என்ற சீட்டாட்ட விளையாட்டு பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. ரம்மி விளையாட அழைக்கும் விதமான விளம்பரங்கள் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிப்பரப்பாவதைப் பார்க்க முடியும். இதனால், இளைஞர்களின் நேரமும் பணமும் விரயமாகி வருகிறது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

ஆனால் அதையும் தாண்டி மனஉளைச்சலில் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. எனவே ஆன்லைன் ரம்மியை தடை செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் முகமதுரஸ்பி முறையீடு செய்துள்ளார். முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் உறுதி அளித்துள்ளனர்.