மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு கோரி வழக்கு! – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

 

மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு கோரி வழக்கு! – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டு வழங்க ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். சமூகநீதியை வென்றெடுப்பதற்கான இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது!” என்று கூறியுள்ளார்.