நடிகர் விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் கையாடல்; பெண் கணக்காளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 

நடிகர் விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் கையாடல்; பெண் கணக்காளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

நடிகர் விஷால் ஃபிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனம் தொழிலாளர்களுக்கு டிடிஎஸ் தொகை செலுத்தவில்லை என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விஷாலின் நிறுவனத்தில் டிடிஎஸ் தொகையைக் கவனிக்க ரம்யா என்ற கணக்காளர் நியமனம் செய்யப்பட்டார்.

நடிகர் விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் கையாடல்; பெண் கணக்காளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கடந்த 3 ஆம் தேதி, அந்த பெண் கணக்காளர் விஷாலின் நிறுவனத்திலிருந்து ரூ.45 லட்சத்தைக் கையாடல் செய்து தலைமறைவாகி விட்டதாக பிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த அந்த புகாரில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கணக்காளராக பணியாற்றி வரும் ரம்யா, கடந்த 5 ஆண்டுகளாக டிடிஎஸ் தொகையைச் செலுத்தவில்லை என்றும் ரம்யா தனது உறவினர்களின் கணக்குக்குப் பணத்தை மாற்றி விட்டு, டிடிஎஸ் பணத்தைச் செலுத்தி விட்டதாக நிறுவனத்துக்குக் கணக்குக் காட்டி ஏமாற்றி வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் நிறுவனத்தின் முக்கியமான கோப்புகளை அழித்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

நடிகர் விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் கையாடல்; பெண் கணக்காளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய விருகம்பாக்கம் போலீசார், பெண் கணக்காளர் ரம்யா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.