ரத்தக்களரியாக மாறிய பொள்ளாச்சி : திமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!!

 

ரத்தக்களரியாக மாறிய பொள்ளாச்சி : திமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!!

பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக வேட்பாளரை ஆதரித்து சபரிமாலா பரப்புரை மேற்கொண்ட போது அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்டது. இதனால் திமுக – அதிமுக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் கிரி மற்றும் உதயகுமார் ஜெகதீஷ் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து திமுக மீது அதிமுகவும், அதிமுக மீது திமுகவும் மாறி மாறி வடக்கிபாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

ரத்தக்களரியாக மாறிய பொள்ளாச்சி : திமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!!

இதில் ஒக்கிலிபாளையம் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் , ஜெயராமன் மகன் பிரவீன் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரத்தக்களரியாக மாறிய பொள்ளாச்சி : திமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!!

இந்நிலையில் கோவை பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளையத்தில் திமுக வேட்பாளர் வரதராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆதரவாளரை தாக்கியதாக அளித்த புகாரில் போலீசார்நடவடிக்கை எடுத்துள்ளனர். திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மகன் மணிமாறன், ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.