‘பல பெண்களை கமல்…’ கொச்சையாக பேசிய ராதாரவி மீது வழக்குப்பதிவு!!

 

‘பல பெண்களை கமல்…’ கொச்சையாக பேசிய ராதாரவி மீது வழக்குப்பதிவு!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவின் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘பல பெண்களை கமல்…’ கொச்சையாக பேசிய ராதாரவி மீது வழக்குப்பதிவு!!

பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கடந்த மார்ச் 28 ஆம் தேதி கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய ராதாரவி, தன்னை நம்பி வந்த பெண்களை காப்பாற்ற முடியாமல் கைவிட்ட கமல் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார். கமல் நேர்மையற்றவர். அவர் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வாக்குகளை பிரிக்க திமுகவின் பி டீமாக களமிறக்கப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் ரூ.27 கோடி பணம் பெற்றுக்கொண்டு திமுக கூட்டணியில் உள்ளனர். காங்கிரஸ் செல்வாக்கை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சுயமான பேச செய்யாதவர் ஸ்டாலின்; அவர் பேப்பரில் இருப்பதை பார்த்து படிப்பார். இப்படி பட்டவர்கள் இருக்கும் திமுக கூட்டணி நிச்சயம் தோல்வியை தழுவும்” என்றார்.

‘பல பெண்களை கமல்…’ கொச்சையாக பேசிய ராதாரவி மீது வழக்குப்பதிவு!!

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவின் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 28 நடந்த பரப்புரையில் கமலை விமர்சித்த ராதாரவி மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராதாரவி பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தொடர்ந்து கொச்சையாக விமர்சித்து வருவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். ராதாரவி ஏற்கனவே நயன்தாரா குறித்து அவதூறாக பேசியதற்காக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சூழலில் அவர் கமல் ஹாசன் குறித்து பேசியது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.