பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு!

 

பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு!

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கலந்து கொண்டார். அதில் பேசிய கல்யாணராமன், இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசினார். இதை கண்டித்து, அந்த நிகழ்ச்சியின் போதே இஸ்லாமியர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு மதத்தினரை இழிவு படுத்தும் நோக்கில் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு!

கல்யாணராமன் மீது குவிந்த புகார்களால், அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய கல்யாணராமன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில், கல்யாணராமன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.