தேர்தல் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு

 

தேர்தல் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அங்கு போட்டியிடுகிறார். இவர்கள் இருவரையும் எதிர்த்து திமுக சார்பில் கே.சீனிவாசன் களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, சென்ற வாகனத்தை தேர்தல் அதிகாரி மாரியப்பன் என்பவர் சோதனை செய்தார். இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மறுப்பு தெரிவித்ததுடன் மாரியப்பனை மிரட்டியுள்ளார்.

தேர்தல் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு

இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து தேர்தல் பணியில் உள்ள மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.