நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு!

 

நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று அமைதியான முறையில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் அதிக அளவு பேசப்பட்ட வேட்பாளர்களில் ஒருவர் குஷ்பு. திமுக, காங்கிரஸ் என கட்சிகளுக்கு சென்றுவந்தாலும், பாஜகவில் சேர்ந்த 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுவே அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றே சொல்லலாம். அதிலும் திமுகவின் கோட்டையான ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு களம் இறங்கினார். குஷ்புவின் பிரச்சார பயணம் மிகவும் இயல்பாகவும், மக்களை கவர்வது போன்றும் இருந்தது.

நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குஷ்பு தனது காரில் தாமரை சின்னத்துடன் கூடிய பாஜக கொடியை கட்டிச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.