திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து அவதூறு பேச்சு: நடிகர் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு!

 

திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து அவதூறு பேச்சு: நடிகர் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு!

சிவகுமாரின் மருமகளும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குறித்து பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதாவது, கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என தெரிவித்திருந்தார். ஜோதிகாவின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.

திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து அவதூறு பேச்சு: நடிகர் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு!

இந்நிலையில் நடிகர் சிவக்குமார் திருப்பதி மலையில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை மிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈமெயில் மூலம் அனுப்பியுள்ளார். இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு
வழக்குப் பதிவு செய்துள்ளனர்.