திமுக வேட்பாளர்களுக்கு பேஸ்புக்கில் கொலை மிரட்டல்… வேலுமணி ஆதரவாளர் மீது பாய்ந்த நடவடிக்கை!

 

திமுக வேட்பாளர்களுக்கு பேஸ்புக்கில் கொலை மிரட்டல்… வேலுமணி ஆதரவாளர் மீது பாய்ந்த நடவடிக்கை!

கோவை மாவட்டம் முழுவதும் அமைச்சர் வேலுமணியின் கன்ட்ரோல். அவரைத் தவிர்த்துவிட்டு அங்கு குண்டு மணி கூட நகர முடியாது. கோவை வேலுமணியின் கோட்டை. படுத்துக்கொண்டே ஜெயிப்பார் என அதிமுகவினர் பில்பட கொடுக்கின்றனர். யாருக்கு சீட் கொடுக்க வேண்டும், கொடுக்கக் கூடாது என்பதில் தொடங்கி அதிமுகவின் அதிகாரமிக்க ஐவர் குழுவிலும் இருப்பவர் வேலுமணி.

திமுக வேட்பாளர்களுக்கு பேஸ்புக்கில் கொலை மிரட்டல்… வேலுமணி ஆதரவாளர் மீது பாய்ந்த நடவடிக்கை!

இவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என திமுக கங்கணம் கட்டியுள்ளது. இவரை எதிர்த்து தொண்டாமுத்தூரில் கார்த்திகேய சிவசேனாதிபதி களமிறங்கியிருக்கிறார். கடுமையான பிரச்சாரம் செய்துவருகிறார். இச்சூழலில் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு பேஸ்புக் மூலமாக வேலுமணியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடமும் திமுக வழக்கறிஞர்கள் எழுத்துப்பூர்வமாகப் புகாரளித்தனர்.

திமுக வேட்பாளர்களுக்கு பேஸ்புக்கில் கொலை மிரட்டல்… வேலுமணி ஆதரவாளர் மீது பாய்ந்த நடவடிக்கை!

இப்புகாரின்பேரில் அதிமுக பிரமுகரும் வேலுமணியின் ஆதரவாளருமான சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் சந்திரசேகர் மீது பொதுஇடத்தில் தகாத வார்த்தை பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய புரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.