‘அவன் இவன்’ திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தாரை இழிவுப்படுத்தியதாக நடிகர் ஆர்யா மீது வழக்கு!
Sep 16, 2020, 20:19 IST1600267772000
அவன் இவன் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தாரை இழிவுபடுத்தியதாக நெல்லை அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 28 ஆம் தேதி நடிகர் ஆர்யா ஆஜராக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்தின் அருகில் அமைந்துள்ள சிறப்பு மிக்க சமஸ்தானம் சிங்கம்பட்டி. சேர, சோழ பாண்டியர்களுக்கு இணையான பெருமை இதற்கும் உண்டு. தமிழகத்தில் ஜமீன் சொத்துக்கள் முடக்கப்பட்டு, ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட நிலையில், இந்த சட்டதிருத்தத்திற்கு முன்பு கடைசியாக பட்டம் சூடி தமிழகத்தின் கடைசி ஜமீனாக வந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்தாரான முருகதாஸ் தீர்த்தபதி. மன்னர் ஆட்சி முறையில் இந்தியாவில் முடிசூட்டப்பட்ட கடைசி மன்னரான ஜமீன்தார், கடந்த மே மாதம் உயிரிழந்தார்.