திருமணம் ஆகாத விரக்தியில், கார் ஓட்டுநர் தற்கொலை!

 

திருமணம் ஆகாத விரக்தியில், கார் ஓட்டுநர் தற்கொலை!

கோவை

கோவை மாவட்டம் போத்தனூரில் திருமணமாகாத விரக்தியில் கார் ஓட்டுநர் சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(30). இவர் கோவை மாவட்டம் போத்தனூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். பெற்றோர் உயிரிழந்து விட்டதால் தனியாக வசித்து வந்த கார்த்தி, தனக்கு திருமணம் செய்து வைக்க யாரும் இல்லை என ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

திருமணம் ஆகாத விரக்தியில், கார் ஓட்டுநர் தற்கொலை!

இந்த நிலையில், நேற்று வீட்டின் கழிவறையில் சாணிப்பவுடரை தண்ணீரில் கரைத்து குடித்து அவர் தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு கார்த்தியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த போத்தனூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.