சாலையில் திடீர் பள்ளம்… கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கிய கார் – ஷாக்கிங் வீடியோ!

 

சாலையில் திடீர் பள்ளம்… கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கிய கார் – ஷாக்கிங் வீடியோ!

குடியிருப்பு வளாகத்தில் வாகன நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலுள்ள காட்கோபர் என்ற இடத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

சாலையில் திடீர் பள்ளம்… கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கிய கார் – ஷாக்கிங் வீடியோ!

காட்கோபரிலுள்ள குடியிருப்பில் வழக்கமாக கார்கள் அனைத்தும் ஒரே இடத்தில் நிறுத்திவைக்கப்படும். அப்படி நிறுத்திவைத்திருக்கும்போது தான் கார் மூழ்கியுள்ளது. அதிருஷ்டவசமாக அப்போது காரில் யாரும் இல்லையென்பதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்கையில் அந்த இடத்தில் கடந்த காலங்களில் ஆழமான கிணறு ஒன்று இருந்ததாகவும், காலப்போக்கில் அது மூடப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

முறையாக அந்தக் கிணறை மூடமால சிமெண்ட் ஸ்லாப்களை மூடி வைத்துள்ளனர். சமீபத்தில் அங்கு அதிக மழை பெய்தால் நீர் உள்ளே இறங்கி திடீர் பள்ளம் உருவாகியிருக்கிறது. அதற்குப் பின்னர் தான் கார் மூழ்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பதறிப்போன குடியிருப்புவாசிகள் அந்த இடத்தில் கிணறு இருந்தது தங்களுக்கு தெரியாது என கூறியிருக்கிறார்கள். மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கிணறை முறையாக மூடப்படாதது குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.