சாலைத் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!

 

சாலைத் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!

திருப்பத்தூர் – வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே, சாலைத் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்த விபத்தில், காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார், சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. இதில் காருக்குள் பயணம் செய்தவர்கள், அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

சாலைத் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து வாணியம்பாடி நகர காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.