கார் பள்ளத்தில் விழுந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு!

 

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அந்த கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு!

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்தவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் 2 பேர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.