சாலையோர மரத்தின் மீது கார் மோதி விபத்து- +2 மாணவர் உள்பட இருவர் பலி

 

சாலையோர மரத்தின் மீது கார் மோதி விபத்து- +2 மாணவர் உள்பட இருவர் பலி

கோயமுத்தூர்

கோவை அருகே நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் ஒன்று, சாலையோர மரத்தின் மீது மோதியதில் 12 ஆம் வகுப்பு மாணவர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் பேரூர் அருகேயுள்ள ஆலந்துறை கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரது மகன் அனந்தராமன்(17). இவர் ஆலந்துறை அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் தனியார் கல்லூரி மாணவர் சஞ்சீவிகுமார்(20). உறவினர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னனூரில் உள்ள உறவினரின் வீட்டிற்கு காரில் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சஞ்சீவிகுமார் ஓட்டிச்சென்றார். இந்த நிலையில், சிறுவாணி சாலையில் சென்றபோது தீடீரென ஓட்டுநரின் கட்டுப்பாடடை இழந்த சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தின் மீது அதிவேகமாக மோதியது.

சாலையோர மரத்தின் மீது கார் மோதி விபத்து- +2 மாணவர் உள்பட இருவர் பலி

இந்த விபத்தில் காரில் இருந்த சஞ்ஜீவ்குமார் மற்றும் அனந்தராமன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை சிறுவன் அனந்தராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து, சிறிது நேரத்தில் சஞ்சீவ்குமாரும் பரிதாபமாக உயிழந்தார். விபத்து குறித்து கோவை மாவட்டம் பேருர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.