இருசக்கர வாகனம் மீது கார் மோதல் – இளைஞர் உயிரிழப்பு

 

இருசக்கர வாகனம் மீது கார் மோதல் – இளைஞர் உயிரிழப்பு

திருச்சி

திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார், மூதாட்டி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

திருச்சி விமான நிலையம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன்(32). இவர் அதே பகுதியில் செல்போன் உதரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ஷேக் அலாவுதீன் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது விமான நிலையம் அருகேயுள்ள சிவாஜிநகர் பிரிவில் சாலையை கடப்பதற்காக அவர் காத்திருந்தார். அதேபோல், அங்கு ஏராளமானோர் வாகனங்களில் காத்திருந்தனர்.

இருசக்கர வாகனம் மீது கார் மோதல் – இளைஞர் உயிரிழப்பு

அப்போது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஓன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையை கடக்க நின்றவர்கள் மீது அதிவேகமாக மோதியது. இதில் ஷேக் அலாவுதீன் மற்றும் அதேபகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி பட்டு ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஷேக் அலாவுதீன் பரிதாபமாக உயிரிழந்தார். மூதாட்டி பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.