மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அரசு பேருந்து ஓட்டுநர் பலி

 

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அரசு பேருந்து ஓட்டுநர் பலி

ஈரோடு அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அரசு பேருந்து ஓட்டுநர் பலி


சென்னிமலை மேற்கு தலவுமலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(44). அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு பேபி (40) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், ரமேஷ் நேற்று நள்ளிரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். கஸ்பாபேட்டை வாய்க்கால் பாலம் பகுதியில் சென்றபோது, பூந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ரமேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவிட்டு, சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றது. கார் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அரசு பேருந்து ஓட்டுநர் பலி