‘கார்கள் மீது அடுத்தடுத்து கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து’ : 4 பேர் மரணம்!

 

‘கார்கள் மீது அடுத்தடுத்து கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து’ : 4 பேர் மரணம்!

தர்மபுரி அருகே கண்டெய்னர் லாரி அடுத்தடுத்து 8 கார்கள் மீது ஏற்பட்ட கோர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி அருகே உள்ள தொப்பூர் கண்வாய் பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று இன்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற கார்கள் மீது அடுத்தடுத்து மோதி கோர விபத்து நிகழ்ந்தது. மொத்தமாக 8 கார்கள் இந்த விபத்தில் சேதமடைந்த நிலையில், விபத்தில் சிக்கிய 4 சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

‘கார்கள் மீது அடுத்தடுத்து கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து’ : 4 பேர் மரணம்!

அதோடு, விபத்துக்குள்ளான கார்களில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் சிக்கிய சில கார்கள் பலத்த சேதம் அடைந்திருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், பிரேக் திடீரென பழுதடைந்ததால் லாரி கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.