உய்யகொண்டான் ஆற்று பாலத்தில் கஞ்சா விற்றவர் கைது; 1கிலோ கஞ்சா பறிமுதல்

 

உய்யகொண்டான் ஆற்று பாலத்தில் கஞ்சா விற்றவர் கைது; 1கிலோ கஞ்சா பறிமுதல்

உய்யகொண்டான் ஆற்று பாலத்தில் நின்று கஞ்சா விற்றுக்கொண்டிருந்தவரை உறையூர் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி தில்லைநகர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் நேற்று இரவு திருச்சி உய்யகொண்டான் ஆற்று பாலம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக ரோந்து வாகனத்தில் வந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரணை செய்தபோது.
பையில் கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

உய்யகொண்டான் ஆற்று பாலத்தில் கஞ்சா விற்றவர் கைது; 1கிலோ கஞ்சா பறிமுதல்

இதனையடுத்து அவரை கைது செய்த உறையூர் காவல்துறையினர் அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவர் மீது வழக்குப்பதிவு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்திரசேகர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.