‘தனியார் மூலம்’ மின்வாரிய ஊழியர்களை தேர்வு செய்யும் ஆணை ரத்து!

 

‘தனியார் மூலம்’ மின்வாரிய ஊழியர்களை தேர்வு செய்யும் ஆணை ரத்து!

தனியார் நிறுவனங்கள் மூலமாக மின்வாரியத்திற்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற மின்வாரியத்தின் ஆணை ரத்து செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் பேசிய அமைச்சர் தங்கமணி, “மின்வாரியத்தின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. தொழிற்சங்க நிர்வாகிகள் தொடர்ந்த கேங்மேன் வழக்கு நிலுவையில் இருப்பதால், பணிநியமனம் கிடைக்கவில்லை. அந்த வழக்கை அவர்கள் வாபஸ் பெற்றால், உடனடியாக 10,000 பேருக்கு வேலை கிடைக்கும். போராட்டம் நடத்தி கொண்டிருக்காமல் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்” என்று கூறினார்.

‘தனியார் மூலம்’ மின்வாரிய ஊழியர்களை தேர்வு செய்யும் ஆணை ரத்து!

தமிழக மின்வாரியத்திற்கு தனியார் மூலம் 30 ஆயிரம் ஆட்கள் தேர்வு செய்யப்பட போவதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்து விட்டதாகவும் மின்வாரியம் அறிக்கை வெளியிட்டது. தனியார் வசம் சென்றால், தமிழர்களுக்கு வேலை கிடைக்காத சூழல் ஏற்படும் என்பதால் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இது தற்காலிகமான அறிவிப்பு தான் என்றும் 3 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம் போல அரசே ஆட்களை தேர்வு செய்யும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ளாத மின்வாரிய ஊழியர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் அமைச்சர் தங்கமணி அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.