பூஜை அறையில் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா ?

 

பூஜை அறையில் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா ?

பூஜை அறையில் குடும்பத்தில் மறைந்த நம் முன்னோர்களின் உருவப் படங்களை கடவுளின் படத்தோடு வைக்கக்கூடாது. கடவுள்களின் திருவுருவப் படங்களின் தலைக்கு மேல் பகுதியில் வைத்தும் வழிபடக்கூடாது. எப்பொழுதும் மறைந்தவர்களின் படங்களை தரை மட்டத்தில் வைக்க வேண்டும். மேலும் கடவுள்களின் படங்களுடன் மறைந்தவர்களின் படங்கள் ஒன்றோடொன்று சேர்ந்த நிலையில் இருப்பது தவறு. மேலும், பித்ரூ லோகம் கடவுள் லோகத்திலிருந்து முற்றிலும் மாறுப்பட்டது.

குலதெய்வமும், இஷ்ட தெய்வமும் ஒரு சேர அமைந்திருக்கும் பூஜையறையில் நம்மை பாதுகாக்கும் நம் உடன் பயணிக்கும் தெய்வமாக மாறிய நம் முன்னோர்களின் படங்களையும் மாட்டலாமே ? முன்னோர்களும் தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுபவர்கள் என்று சிலர் நினைக்கலாம். உண்மைதான் தெய்வமாக இருந்து காக்கும் முன்னோர்கள் மனிதர்களாக இருந்து இறந்தவர்கள். இறைவன் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். இறந்தவர்களின் படங்களை இறைவன் இருக்கும் படத்துக்கு கீழே தரையில் வைத்து வணங்குவது தான் நல்லது. அதே போன்று கடவுள் படங்களோடு பக்கத்தில் ஒட்டி வைத்திருப்பதும் தவறு.

இவ்வளவு சம்பிரதாயங்களையும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்ததால் தான் பூஜையறையில் இறந்தவர்களின் படங்களை மாட்டாமல் வேறு இடங்களில் தென் திசையை நோக்கி இருக்குமாறு மாட்டிவைத்தார்கள். பித்ரு உலகம் பூமியிலிருந்து தென் திசையை நோக்கி இருக்கிறது என்ற நம்பிக்கை. அதனால் தான் இறந்தவர்களின் படங்களை தென் திசை நோக்கி மாட்டிவைத்தார்கள். ஆனால் ஆன்மிக பெரியோர்கள் பூஜையறை தவிர வேறு எந்த இடத்தில் மாட்டினாலும் தவறில்லை என்கிறார்கள். கடவுள் படங்களுக்கு செய்யும் வழிபாட்டையே இறந்தவர்களின் படங்களுக்கும் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பூஜை அறையில் இருக்கும் கடவுள் படங்களும், இறந்தவர்களின் படங்களும் வணங்கத்தக்க வகையில் சுத்தமாக துடைத்து நறுமணமிக்க மலர்களால் அலங்கரித்து வழிபட வேண்டும்.

பூஜை அறையில் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா ?

இறைவன் முன்னிலையில் பஞ்ச பாத்திர கலசத்தில் நீர் நிரம்பியிருப்பது போன்று இறந்தவர்களின் படங்களுக்கு முன்னால் செம்பு நிறைய நீர் வைப்பது அவர்களது ஆசிர்வாதத்தை அதிகரிக்கும். இறந்தவர்கள் வணங்குதலுக்கும் வழிபாடுக்கும் உரியவர்களே என்றாலும் இறைவனுக்கு ஒப்பானவர்கள் அல்ல என்பதால் பூஜையறையில் வைக்காமல் தனியாக வைத்து வணங்குவது தான் முழுமையான பலனை அளிக்கும்.

இறைவனுக்கு நிகரான வழிபாட்டை செய்வதன் மூலம் இறந்தவர்களின் ஆன்மா குளிர்ந்து நம்மை ஆசிர்வதிக்கும். இறைவனின் ஆசியும் முழுமையாக கிட்டும்.

  • வித்யா ராஜா