ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாமா?

 

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாமா?

கொரோனா பரவல் நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் இந்தியாவே உலகளவில் முதலிடத்தில் உள்ளது. அதனால், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற மத்திய அரசு அனுமதி அளிக்க வில்லை. ஐபிஎல் போட்டிகள்கூட அதனால்தான் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறுகின்றன.

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாமா?

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. லட்சக்கணக்கான வீரர்களின் கனவு ஒலிம்பிக் பதக்கம் வெல்வது. ஆனால், கொரோனாவால் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள விரும்பும் வீரர்கள் பயிற்சி கூட எடுக்க முடியாத நிலைமையில் இருக்கிறார். இந்த நிலையில் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் சாத்தியம் உள்ள முக்கிய வீரர்களுக்கான பயிற்சி முகாமுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாமா?

தேசிய துப்பாக்கி சுடுதல் அணியினருக்காக கார்ணி சிங் துப்பாக்கி சுடும் தளத்தையும் இந்திய விளையாட்டு ஆணையம் திறந்துள்ளது.

மேலும், அரசின் செலவில் 64 கூடுதல் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு ஆயுதங்களும், இலக்குகளும் வழங்கப்படும். தற்போதைய கொவிட்-19 நிலைமையை கருத்தில் கொண்டு, பயிற்சி முகாமை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அனைத்து பங்குதாரர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாமா?

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வீரர்களும், பணியாளர்களும் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதால், 10 நாட்களுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் சரியானதாக இருக்காது.

மேலும், வீரர்களுக்கான தனிமைப்படுத்துதல் செயல்முறை மற்றும் தங்குமிடம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது.