பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்!

 

பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்!

பிரபல திரைப்பட இயக்குனர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் சகோதரும் ஆன ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்!

இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 2001 ஆம் ஆண்டு இவரின் ஒளிப்பதிவில் வெளியான ‘கடல் பூக்கள்’ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அந்த படத்திற்காக அவருக்கு சாந்தாரம் விருது வழங்கப்பட்டது. அதே போல கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்திற்கும், 2004 ஆம் ஆண்டு வெளியான ‘கண்களால் கைது செய்’ திரைப்படத்திற்கும் தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்றார்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்!

இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக இவர் உடல்நலம் முன்னேற்றம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவரது உடல்நிலை மீண்டும் மோசமாகியுள்ளது. அதனால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் சற்று முன்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் கண்ணனின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த கலைஞர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மகள்களுள் ஒருவர் அமெரிக்காவில் இருப்பதால், நாளை இறுதி சடங்கு நடைபெறும் என தெரிகிறது.