ஊரடங்கால் ஆன்லைன் மூலமாக வீடியோ கால் செய்து சம்பாதிக்கும் பாலியல் தொழிலாளிகள் !!

 

ஊரடங்கால் ஆன்லைன் மூலமாக வீடியோ கால் செய்து சம்பாதிக்கும் பாலியல் தொழிலாளிகள் !!

தமிழ்நாட்டில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பாலியல் தொழிலாளிகள் வீடியோ கால் மூலம் வாடிக்கையாளர்களுடன் பேசி பணம் சம்பாதித்து வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக சமூக இடைவெளி கடைப்பிடிக்குமாறு அரசு அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பாலியல் தொழிலாளர்கள் தங்களுக்கு வருமானம் இல்லை என்பதால் வீடியோ கால் மூலம் சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 35 வயதான பாலியல் தொழிலாளி ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்.

ஊரடங்கால் ஆன்லைன் மூலமாக வீடியோ கால் செய்து சம்பாதிக்கும் பாலியல் தொழிலாளிகள் !!

இதனால் தினமும் இரவு, தனது குழந்தைகள் தூங்கியபின், மேக்கப் போட்டுக்கொண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு வீடியோ கால் செய்வதற்காக மொட்டை மாடிக்குச் செல்கிறாள், அதற்காக அவளுக்கு வாடிக்கையாளர்கள் பணம் கொடுக்கிறார்கள்.
வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதும் தனது வருமானம் குறையத் தொடங்கியது என கூறும் அந்த பெண் அப்போதிருந்து அவள் சம்பாதிக்கவில்லை எனவும் சில வாரங்களுக்கு முன்பு தனது வாடிக்கையாளர்களுக்கு வீடியோ அழைப்புகளைச் செய்யத் தொடங்கி சம்பாதிப்பதாகவும் தெரிவிக்கிறார்.
ஸ்மார்ட்போன் மற்றும் இணையதளம் மூலம் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் தங்கள் வர்த்தகத்தை ஆன்லைனில் நடத்துகின்றனர். அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் தரவேண்டிய பணத்தை GPay போன்ற மின்னணு பரிமாற்றத்தை பயன்படுத்துகிற்னர். பாலியல் தொழிலாளர்கள் தங்கள் மொபைல் கணக்கில் போதுமான இருப்பு இல்லை என்றால், வாடிக்கையாளர்கள் அவர்களுக்காக ரீசார்ஜ் செய்கிறார்கள்.