தீபாவளி பண்டிகை காலத்தில் சீனாவுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய இந்திய மக்கள்

 

தீபாவளி பண்டிகை காலத்தில் சீனாவுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய இந்திய மக்கள்

நாட்டின் முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் ரூ.72 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதேசமயம் சீன பொருட்களை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் புறக்கணித்ததால் சீனாவுக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) தனது ஆய்வுகளுக்காக, டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, நொய்டா, கொச்சின் உள்பட 20 முக்கிய நகரங்களை விநியோக நகரங்களாக எடுத்துக்கொள்கிறது. இந்த 20 நகரங்களில் தீபாவளி பண்டிகை கால விற்பனை தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. வர்த்தகர்களும், பொதுமக்களும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று சி.ஏ.ஐ.டி. ஏற்கனவே கோரிக்கை விடுத்தது.

தீபாவளி பண்டிகை காலத்தில் சீனாவுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய இந்திய மக்கள்
பொருட்களை வாங்க குவிந்த மக்கள் வெள்ளம்

கடந்த ஜூன் மாதத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது நம் வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்தனர். அப்போது சீன வீரர்களுடான மோதலின்போது 20 இந்திய வீரர்கள் மீது வீரமரணம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று உந்துதலை பொதுமக்களிடம் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகை காலத்தில் சீனாவுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய இந்திய மக்கள்
சி.ஏ.ஐ.டி.

அதன் தாக்கம் இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் எதிரொலித்துள்ளது. அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் அறிக்கையின்படி, சீன பொருட்கள் புறக்கணிப்பு மத்தியில் தீபாவளி பண்டிகை காலத்தில் 20 விநியோக நகரங்களில், நுகர்வோர் சாதனங்கள், தங்க நகைகள், காலணிகள் என அனைத்து விதமான பொருட்களும் சுமார் மொத்தம் ரூ.72 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது. சீன பொருட்களை மக்களும், வர்த்தகர்களும் புறக்கணித்ததால் சீன பொருட்கள் விற்பனை படுத்தது. இதனால் சீனாவுக்கு இந்த பண்டிகை காலத்தில் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.