திருச்செங்கோட்டில் கேபிள் டிவி ஆப்பரேட்டர் படுகொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை!

 

திருச்செங்கோட்டில் கேபிள் டிவி ஆப்பரேட்டர் படுகொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை!

நாமக்கல்

திருச்செங்கோட்டில் கேபிள் டிவி ஆப்பரேட்டர், மர்மகும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியில் சொந்தமாக கேபிள் டிவி நடத்தி வருகிறார். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், முருகன் இன்று காலை கோவில் செல்வதற்காக வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

திருச்செங்கோட்டில் கேபிள் டிவி ஆப்பரேட்டர் படுகொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை!

வி.ஐ.பி கார்டன் செல்லும் சாலையில் சென்றபோது, முருகனை மர்மகும்பல் ஒன்று வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில், தலை 2 ஆக பிளந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு டிஎஸ்பி செல்வம் தலைமையில், டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, உடலை பிரேத பரிசோனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை தொடர்பாக, திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலையான முருகன் மீது 10 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனால் முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டாரா? என்றும், அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.