4 பேருக்காக விமானத்தின் 180 இருக்கைகளையும் முன்பதிவு செய்த தொழிலதிபர்

 

4 பேருக்காக விமானத்தின் 180 இருக்கைகளையும் முன்பதிவு செய்த தொழிலதிபர்

டெல்லி: வெறும் 4 பேருக்காக விமானத்தின் 180 இருக்கைகளையும் தொழிலதிபர் ஒருவர் முன்பதிவு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

போபாலை சேர்ந்த பணக்கார தொழிலதிபர் ஒருவர் தனது மூன்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வேலைக்காரியை டெல்லிக்கு அனுப்ப, தனியார் நிறுவனத்தின் ஏ-320 விமானம் ஒன்றின் 180 இருக்கைகளையும் முன்பதிவு செய்தார். அதாவது மொத்த விமானத்தையும் வாடகைக்கு எடுத்தார். கொரோனா பரவல் அச்சம் காரணமாக அவர் இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது. இதற்காக அவர் சுமார் ரூ.20 லட்சம் செலவு செய்துள்ளார்.

கொரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக போபாலில் சிக்கித் தவித்த தனது மகள், இரண்டு குழந்தைகள் மற்றும் வேலைக்காரி ஆகியோரை டெல்லிக்கு அனுப்ப தொழிலதிபர் இவ்வாறு செய்தார். அதனால் கடந்த திங்களன்று டெல்லியில் இருந்து விமான குழுவினருடன் மட்டுமே போபாலுக்கு வந்து தரையிறங்கிய அந்த விமானம், நான்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பிச் சென்றது.