கடன் தொல்லையால், கோழிப்பண்ணை உரிமையாளர் தற்கொலை!

 

கடன் தொல்லையால், கோழிப்பண்ணை உரிமையாளர் தற்கொலை!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே கடன் தொல்லையால் கோழிப்பண்ணை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த இடைகோடு திருத்திகோணம் பகுதியை சேர்ந்தவர் ஜெபர்சன். இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இவரது மனைவி சந்திரமேகலா. இவரகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பண்ணை தொழிலில் ஜெபர்சனுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடன் தொல்லையால், கோழிப்பண்ணை உரிமையாளர் தற்கொலை!

இதனால் அவர் கடந்த சில மாதங்களாக நாகர்கோவில் என்.ஜி.ஓ காலனி பகுதியில் தனியே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ஜெபர்சனின் நண்பர் ஒருவர், அவரை காண சென்றுள்ளார். அப்போது, வீட்டில் ஜெபரசன் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர், சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சந்திரமேகலா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.