கடன் தொல்லையால் சாலையில் தீக்குளித்த வியாபாரி… வைரலாகும் வீடியோ…

 

கடன் தொல்லையால் சாலையில் தீக்குளித்த  வியாபாரி… வைரலாகும் வீடியோ…

கோவை

கோவை அருகே கடன்தொல்லையாடல் வியாபாரி நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த செட்டிக்காபாளையம் பகுதியை சேர்ந்த சேதுராமன் மகன் விஜயகுமார்(40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். விஜயகுமார் அதே பகுதியில் கோழிக்கறி கடை நடத்தி வருவதுடன், குடிநீர் கேன் தொழிலிணலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், விஜயகுமார் தொழில் செலவிற்காக, அதே பகுதியை சேர்ந்த பைபான்சியர் ஜெயபிரகாஷ் என்பவரிடம் 20 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கு தவணை முறையில் 11 ஆயிரம் திருப்பி செலுத்திய நிலையில், மீதம் 9 ஆயிரம் செலுத்த வேண்டி இருந்துள்ளது.

கடன் தொல்லையால் சாலையில் தீக்குளித்த  வியாபாரி… வைரலாகும் வீடியோ…

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தாரைக்குளத்தில் உள்ள கறிக்கடைக்கு, விஜயகுமார் டெம்போ வாகனத்தில் சென்றுள்ளார். அங்கு காத்திருந்த பைனான்சியர் ஜெயப்பிரகாஷ், விஜயகுமாரிடம் கடன் பணத்தை திருப்பி தரக்கோரி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், பணத்தை தர முடியாவிட்டால் டெம்போ வாகனத்தை எழுதி தரும்படி மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதனால் மனைமுடைந்த விஜயகுமார், திடீரென கடைமுன் நின்ற இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதித்தனர்.

அங்கு விஜயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, விஜயகுமார் தீக்குளித்தது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.