என்.ஐ.ஐ.டி. லாபம் ரூ.52 கோடி.. வருவாய் 44 சதவீதம் வளர்ச்சி..

 
என்.ஐ.ஐ.டி.

என்.ஐ.ஐ.டி.  நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.52.4 கோடி ஈட்டியுள்ளது. 


திறன்கள் மற்றும் திறமை மேம்பாட்டு நிறுவனமான என்.ஐ.ஐ.டி. தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. என்.ஐ.ஐ.டி.  நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.52.4 கோடி ஈட்டியுள்ளது. 2020 செப்டம்பர் காலாண்டில் என்.ஐ.ஐ.டி.  நிறுவனம் நிகர லாபமாக ரூ.26 கோடி ஈட்டியிருந்தது. ஆக கடந்த செப்டம்பர் காலாண்டில் என்.ஐ.ஐ.டி. நிறுவனத்தின் லாபம் 2 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

என்.ஐ.ஐ.டி.

2021 செப்டம்பர் காலாண்டில் என்.ஐ.ஐ.டி.  நிறுவனம் நிகர வருவாயாக ரூ.314.2 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 44 சதவீதம் அதிகமாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் என்.ஐ.ஐ.டி. நிறுவனம் நிகர வருவாயாக ரூ.218.9 கோடி ஈட்டியிருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, என்.ஐ.ஐ.டி.  நிறுவனத்தில் 2,661 பணியாளர்கள் உள்ளனர்.

என்.ஐ.ஐ.டி.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, என்.ஐ.ஐ.டி.  நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.13 சதவீதம் உயர்ந்து ரூ.400.15ஆக இருந்தது.