பஜாஜ் பின்சர்வ் லாபம் ரூ.1,346 கோடி.. பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

 
தவணை செலுத்தவில்லை என்றால் அதிக வட்டி; பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்!

பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,346 கோடி ஈட்டியுள்ளது. 

வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,346 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 37.48 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.979 கோடி ஈட்டியிருந்தது.

வட்டி வருவாய் அமோகம்.. ஆனால் லாபத்தில் சரிவை சந்தித்த பஜாஜ் பைனான்ஸ்

2022 மார்ச் காலாண்டில் பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் நிகர வருவாயாக ரூ.18,862 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 22.58 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் நிகர வருவாயாக ரூ.15,387 கோடி ஈட்டியுள்ளது. பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.4 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது.

 பஜாஜ் பின்சர்வ்

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, பஜாஜ் பின்சர்வ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.70 சதவீதம் குறைந்து ரூ.14,908.45ஆக இருந்தது.