5 நாளும் முதலீட்டாளர்களுக்கு அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்... சென்செக்ஸ் 2,311 புள்ளிகள் உயர்வு..

 
6 நாட்களுக்கு பிறகு விடுதலையான காளை! சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 2,311 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வரையிலான 5  வர்த்தக தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குககளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவது, இண்டஸ்இந்த் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் அம்புஜா சிமெண்ட் போன்ற நிறுவனங்களின் கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தது, பணவீக்கம் சற்று தணிந்தது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

அன்னிய முதலீடு

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.261.04 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 15) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.251.92 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.9.12 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

கச்சா எண்ணெய்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,311.45 புள்ளிகள் குறைந்து 56,072.23 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 670.25 புள்ளிகள் சரிவு கண்டு 16,719.45 புள்ளிகளில் முடிவுற்றது.