பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தம்... சென்செக்ஸ் 87 புள்ளிகள் சரிவு..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 87 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும் வர்த்தகத்தின் இடையே ஏற்றம் கண்டது. ஆனாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, டி.சி.எஸ். முடிவுகள் எதிர்பார்த்த மாதிரி அமையாதது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல் மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.         

பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,100 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,321 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 161 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.253.25 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.67 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. 

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 86.61 புள்ளிகள் குறைந்து 54,395.23 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 4.60 புள்ளிகள் சரிவு கண்டு 16,216.00 புள்ளிகளில் முடிவுற்றது.