சென்செக்ஸ் 533 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.99 லட்சம் கோடி லாபம்..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 533 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இடையில் சிறிய ஏற்பட்டபோதிலும் பங்கு வர்த்தகம் பின்னர் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டைட்டன் மற்றும் டி.சி.எஸ். உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,838 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,610 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 82 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.277.19 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.99 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 533.15 புள்ளிகள் உயர்ந்து 61,150.04 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 156.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,212.35 புள்ளிகளில் முடிவுற்றது.