பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றத்துக்கு தடை.. சென்செக்ஸ் 224 புள்ளிகள் சரிவு

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 224 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் கடும் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் படிப்படியாக ஏற்றம் கண்டது. ஆனால் இறுதியில் பங்கு வர்த்தகம் இறக்கம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் பவர் கிரிட் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இன்போசிஸ் மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இன்போசிஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,692 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,779 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 140 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.285.92 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.80 ஆயிரம் கோடி  கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 224.11 புள்ளிகள் குறைந்து 60,346.97 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 66.30 புள்ளிகள் சரிவு கண்டு 18,003.75 புள்ளிகளில் முடிவுற்றது.