தொடர் ஏற்றத்துக்கு தடை.. சென்செக்ஸ் 215 புள்ளிகள் வீழ்ச்சி..

 
ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 793 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 215 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சிறிய உயர்வுடன் தொடங்கியது. இருப்பினும் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை, பின்னர் படிப்படியாக வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன் பார்மா மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல் மற்றும் மாருதி சுசுகி உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

கோடீஸ்வரர்கள் நிறைந்த இன்போசிஸ் நிறுவனம்… கோடீஸ்வர பணியாளர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்தது

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,805 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,666  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 138 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.281.57 லட்சம் கோடியாக இருந்தது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 215.26 புள்ளிகள் சரிந்து 60,906.09 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 62.55 புள்ளிகள் குறைந்து 18,082.85 புள்ளிகளில் முடிவுற்றது.