5 தினங்களில் சென்செக்ஸ் 619 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.5.08 லட்சம் கோடி லாபம்

 
முதலீட்டாளர்களை கை விடாத பங்கு வர்த்தகம்… 5 நாளில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம்….

இந்த வாரம் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 619 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கடந்த திங்கள் மற்றும் இன்றும் மட்டும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. மற்ற 3 தினங்களில் (செவ்வாய், புதன், வியாழன்) பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, பங்குகளில் முதலீட்டாளர்கள் நிலைப்பாடு மற்றும் சர்வதேச பங்குச் சந்தை நிலவரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

காலாண்டு நிதி நிலை முடிவுகள்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.270.15 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வியாழக்கிழமையன்று (நவம்பர் 4) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.265.07 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் .முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.5.08 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 619.07 புள்ளிகள் உயர்ந்து 60,686.69 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 185.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,102.75 புள்ளிகளில் முடிவுற்றது.