மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தொழில் நிறுவனம் தொடக்கம்

 

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தொழில் நிறுவனம் தொடக்கம்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் டிசம்பர் 3 இயக்கத்தினர் இணைந்து, பீனிக்ஸ் அக்ரிகல்சர் ப்ராடாக்ட்ஸ் என்னும் புதிய தொழில் நிறுவனத்தை துவங்கியுள்ளனர். ஈரோட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அமிர்தா பால் நிறுவனர் ஆர்.மோகனசுந்தரம் கலந்துகொண்டு, புதிய நிறுவனத்தை துவக்கிவைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தொழில் நிறுவனம் தொடக்கம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ், இந்த நிறுவனம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து இயங்க உள்ளதாகவும், இந்த நிறுவனம் மூலம் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தை நடத்த உதவியாக இருக்கும் எனவும் கூறினார்.மேலும், நிறுவனத்தின் பொருட்களை மார்க்கெட்டில் சந்தைப்படுத்தும் டீலர்ஷிப்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் முதல் விற்பனையை, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.