சென்னையில் 8 ஆம் தேதியில் இருந்து பேருந்துகள் இயங்கும்.. ஆனால் இவர்களுக்கு மட்டும் தான் அனுமதி!

 

சென்னையில் 8 ஆம் தேதியில் இருந்து பேருந்துகள் இயங்கும்.. ஆனால் இவர்களுக்கு மட்டும் தான் அனுமதி!

கொரோனா பாதிப்பால் 2 மாதங்களாக இயக்கப்படாத பேருந்துகள், கடந்த வாரம் இயக்கப்பட்டது. கொரோனா அதிகமாக இருக்கும் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 50% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்கள் வந்து செல்வதற்காக வரும் 8 ஆம் தேதி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா அறிவித்திருக்கிறார்.

சென்னையில் 8 ஆம் தேதியில் இருந்து பேருந்துகள் இயங்கும்.. ஆனால் இவர்களுக்கு மட்டும் தான் அனுமதி!

வரும் ஜூன் 15 ஆம் முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதனால் தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காகவும் ஆசிரியர்களுக்காகவும் சென்னையில் 41 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.