திருச்சியில் பேருந்தை கடத்திய நபர் கைது!

 

திருச்சியில் பேருந்தை கடத்திய நபர் கைது!

திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தை கஞ்சா போதையில் ஒருவர் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில் பேருந்தை கடத்திய நபர் கைது!

கரூரிலிருந்து திருச்சிக்கு வந்த அரசு சிறப்பு பேருந்து ஒன்று மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து நிறுத்தப்பட்டது. பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுனரும் நடத்துனரும் டீ குடிக்க கடைக்கு சென்றபோது கஞ்சா போதையில் இருந்த இளைஞர் அரசு பேருந்தை கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பேருந்து தொழிலாளர்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக பேருந்தை 2 கிலோ மீட்டர் தொலைவில் மடக்கி பிடித்த காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கஞ்சா போதையில் பேருந்தை கடத்திய நபர் பெயர் அஜித் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.