எதிரே வந்த வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய பேருந்து: ஓட்டுநர் பரிதாப பலி!

 

எதிரே வந்த வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய பேருந்து: ஓட்டுநர் பரிதாப பலி!

புதுச்சேரியில் காவலர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எதிரே வந்த டாடா ஏஸ் வாகனம் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தி செஞ்சி அருகே இருக்கும் கஞ்சானூரில் துப்பாக்கிச் சூடு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. அங்கு துப்பாக்கிச் சூடு பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக, புதுச்சேரியில் இருந்து 46 ஐ.ஆர்.பி.எப் காவலர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து, அரியூர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்துள்ளது.

எதிரே வந்த வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய பேருந்து: ஓட்டுநர் பரிதாப பலி!

இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த டாடா ஏஸ் வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், டாடா ஏஸ் ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பேருந்தின் முன் பக்கம் அமர்ந்திருந்த 5 காவலர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் ஓட்டுநரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் சின்னபாபு சமுத்திரத்தை சேர்ந்த சிவகுமார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.