பிரபல தாதாக்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள பங்களா இடித்து தரைமட்டம் -மாஃபியா கும்பலை ஒழிக்க முதல்வர் அதிரடி..

 

பிரபல தாதாக்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள பங்களா இடித்து தரைமட்டம் -மாஃபியா கும்பலை ஒழிக்க முதல்வர் அதிரடி..

உத்திரபிரதேச மாநிலத்தில் நொய்டாவில் பிரபல தாதாக்களான சுந்தர் பாட்டி மற்றும் சத்வீர் பன்சால் ஆகியோர் கொலை ,கொள்ளை ,ஆள் கடத்தல் போன்ற சமூக விரோத செயல்கள் மூலம் பல கோடிக்கணக்கில் பங்களாக்கள் ,சொத்துக்கள் வாங்கிப்போட்டுள்ளனர் .சுந்தர் பாட்டி குற்றச் செயல்களால் சம்பாதித்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ .1 கோடி 60 லட்சம்.
சனிக்கிழமை முதல்வரின் உத்தரவுப்படி நொய்டாவில் உள்ள அவர்களின் அரண்மனை போன்ற ஒரு பங்களாவினை ஜேசிபி இயந்திரம் மூலம் 40க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் அதிகாரிகள் இடித்து தள்ளினார்கள் . 25 லட்சம் மதிப்புள்ள அவரது இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அவர்கள் எட்டு கோடிக்கும் அதிகமான சொத்துக்களை சமூக விரோத செயல் மூலம் சேர்த்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள் .Four Excise Cops Hurt In Attack By Liqour Mafia In Angul Village ...

 

 

இதற்கு முன்னதாக பிரபல தாதா விகாஸ் துபேவின் பங்காளவினையும் அதிகாரிகள் இடித்து தள்ளியுள்ளார்கள்.
இதேபோல், தாதாக்கள் அனில் துஜனா கேங் மற்றும் சந்திரபால் பிரதான் ஆகியோரின் நொய்டாவில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் .மாஃபியா கும்பலுக்கெதிராக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள் .