மதுரை அருகே கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 3 பேர் பரிதாப மரணம்!

 

மதுரை அருகே கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 3 பேர் பரிதாப மரணம்!

மதுரை மேலமாசி வீதி அருகே வணிக கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் மேலமாசி வீதி பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன். இவருக்கு சொந்தமாக அங்கு ஒரு பழமையான குடியிருப்பு இருக்கிறது. அந்த கட்டிடத்தை இடித்து, குடி மராமத்து பணிகளை செய்ய திட்டமிட்ட வாசுதேவன் இன்று காலை 10க்கும் மேற்பட்டோரை வைத்து வேலை செய்து வந்திருக்கிறார்.

மதுரை அருகே கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 3 பேர் பரிதாப மரணம்!

இந்த நிலையில், திடீரென எதிர்பக்கம் இருந்த கட்டிட சுவர் இடிந்து விழுந்து தரை மட்டமாகி உள்ளது. அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 6 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அதில் மூன்று பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த சந்திரன், ராமன் மற்றும் ஜெயராமன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரைந்து வந்த போலீசார், அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.