பி.எஸ்.என்.எல் ரூ.777 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் பிளான் செப்டம்பர் 20 வரை நீட்டிப்பு

 

பி.எஸ்.என்.எல் ரூ.777 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் பிளான் செப்டம்பர் 20 வரை நீட்டிப்பு

டெல்லி: பி.எஸ்.என்.எல் ரூ.777 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் பிளான் குறிப்பிட்ட வட்டாரங்களில் செப்டம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ரூ.777 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் பிளான் குறிப்பிட்ட வட்டாரங்களில் செப்டம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பிளான் கடந்த வாரம் வரை மட்டுமே கிடைக்கும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது.

.777 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் பிளான் சத்தீஸ்கர், டாமன் டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, குஜராத், கோவா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட்டாரங்களில் செப்டம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பிளானில் நொடிக்கு 50 எம்.பி வேகத்துடன் அதிகபட்சம் 500 ஜிபி வரை டேட்டா பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் பிறகு 2 எம்.பி வேகத்தில் டேட்டா கிடைக்கும். இந்த பிளானின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.